போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Comments