பள்ளி பொது தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16ல்துவங்கியது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.நேற்று சமூக அறிவியல் பாட தேர்வு நடந்தது.

நேற்றைய தேர்வுடன், இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் முடிந்து விட்டன.பத்தாம் வகுப்புக்கு விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 24ல் துவங்குகிறது. பிளஸ் 1, பிளஸ் 2க்கு விடைத்தாள் திருத்தம் ஏற்கனவே துவங்கி விட்டது. இதை தொடர்ந்து, பிளஸ் 2க்கு, மே, 16; பிளஸ் 1க்கு, மே, 30; பத்தாம் வகுப்புக்கு, மே, 23ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Comments