3,550 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,710 இளநிலை உதவியாளர்கள் என, 4,970 பணியிடங்கள், 2011 - 12ல் நிரப்பப்பட்டன.


  இந்த திட்டத்தில், ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு வழங்கி, மத்திய அரசின் நிதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2017 -18ல், 4,970 பணியிடங்களுக்கு, பணி நீட்டிப்புஉத்தரவு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 3,550 ஆசிரியர்கள் உள்ளிட்ட, 4,970 பணியிடங்களுக்கு, 2020வரை பணி நீட்டிப்பு வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Comments